ஞாயிறு, அக்டோபர் 17, 2010

படையென சங்கம் விரைகிறது...


யுவக்களை மிகுந்த இளைஞர்கள் எழுந்தால்
யுகப்பிரளயமே உருவாகும்.
தேசம் ஒன்றென இளைஞர்கள் இணைந்தால்
தேவலோகமே வரவாகும்...
தேவலோகமே வரவாகும்.

(யுவக்களை)

கேசவன் வகுத்த பாதையில் செல்லும்
சங்கம் சொல்லும் சேதி இது.
பாதகம் செய்யும் தீயவர் ஓடிட
படையென சங்கம் விரைகிறது.

எஃகென நரம்பும் இரும்பென தசையும்
கொண்டவர்கள் இவ்வணியினிலே.
தேசபக்தியும் தெய்வ பக்தியும்
பெருகுது எங்கள் நெஞ்சினிலே!

(யுவக்களை)
மாதவன் வளர்த்த மாபெரும் சங்கம்
சேவகம் செய்திட விரைகிறது.
பாரதம் உலகின் குருவாய் ஆகும்
காலம் நெருங்கி வருகிறது.

நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும்
கொண்டவர்கள் இவ்வணியினிலே.
சேவை எண்ணமும் சோதர உணர்வும்
பெருகுது எங்கள் நெஞ்சினிலே!

(யுவக்களை)

தியாக வேள்வியில் வாழ்வினை நெய்யாய்
ஈந்தவர் வளர்த்த சங்கமிது.
தேசிய நறுமணம் எங்கும் பரவிட
காவிக்கொடியுடன் விரைகிறது.

கடமை உணர்வும் கட்டுப்பாடும்
கொண்டவர்கள் இவ்வணியினிலே.
தூய ஒழுக்கமும் இனிய சொற்களும்
பெருகுது எங்கள் நெஞ்சினிலே!

(யுவக்களை)
---------------------------------------------
குறிப்பு: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் துவங்கிய நாள்: 1925 விஜயதசமி.
நன்றி: விஜயபாரதம் (தீபாவளிமலர்-2008)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக