செவ்வாய், ஜூலை 29, 2014

தேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்




...நீதிபதிகளும் தனிநபர்களே. அவர்களது விருப்பு வெறுப்புகளும், அரசியல் சார்புகளும் நீதிபதிகளின் நியமனங்களில் வெளிப்பட்டால், எதிர்காலத்தில் நீதித்துறை முற்றிலும் நிலைகுலைந்துவிடும். அதற்கான எச்சரிக்கையே தற்போதைய நிகழ்வுகள் எனில் மிகையில்லை.

மக்கள் பிரதிநிதிகள் தேர்தலிலேனும் மக்களால் மதிப்பிடு செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. அதிகார வர்க்கமும் அரசுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், நீதிபதிகள் மட்டும் தேவலோகத்திலிருந்து வந்தவர்கள் போல யாருக்கும் கட்டுப்படத் தேவையில்லை என்பதே ஒருவகையில் முறைகேடுகளை ஊக்குவிக்கிறது. மாவட்ட நீதிபதிகள் நியமனங்களில் கிளம்பிவரும் ஊழல் புகார்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இவை அனைத்திற்கும் காரணம், தங்களைத் தாங்களே நியமித்துக்கொள்ளும் நீதித்துறையின் சுயஆட்சி முறை தான். இதற்கு சில கட்டுப்பாடுகள் தேவை.....

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

-------------------
விஜயபாரதம்
 

 

.

வியாழன், ஜூலை 10, 2014

எங்கும் அம்மா, எதிலும் அம்மா… (3 பகுதிகள்)


ஒரு மக்கள்நல அரசு என்பது எளியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவே இருக்க வேண்டும். சமுதாயத்தில் வலிவுள்ளோர் பெறும் அனைத்து வசதி வாய்ப்புகளையும் எளியோர் பெறுவதற்கு உரிய ஏற்பாடுகள் இருக்க வேண்டும். இல்லாவிடில், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலைக்கு எளியோர் தள்ளப்பட்டு, அவர்களின் முன்னேற்றம் தடைப்படும்.

எனவே தான் மக்களாட்சி முறையில் எளியோரின் நலமே பிரதானம் என்ற கருத்து உருவானது. ஆனால், எளியோர் யாவர் என்பதைக் கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது. வாக்குவங்கி அரசியலே மக்களாட்சி முறையைத் தீர்மானிப்பதால், எளியோரை மட்டும் கண்டறிந்து அவர்களைக் கைதூக்கிவிடுவது சிரமமான காரியமாகி விடுகிறது. இதற்கு நல்ல உதாரணம், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள்.

வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் இலவசத் திட்டங்களும் (விலையில்லா திட்டங்கள் என்கிறது அரசு), மலிவுவிலை திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாகவே அண்மையில் நடைபெற்ற லோக்சபை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக அமோக வெற்றி பெற்றது என்ற கருத்தும் உண்டு.....

..................................
                 முழுக் கட்டுரையை மூன்று பாகங்களாக தமிழ் ஹிந்து இணையதளத்தில் காணலாம்:

பகுதி 1

 

பகுதி 2

 

பகுதி 3


--------------------
விஜயபாரதம் 
(04.07.2014, 11.07.2014, 18.07.2014)
.