ஞாயிறு, மே 04, 2014

சென்னை குண்டுவெடிப்புகள்: தொடரும் அச்சுறுத்தல்கள்



மே 1-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகள், கணப்பின் அருகே வைக்கப்பட்டுள்ள பஞ்சுப்பொதி போன்ற அபாய நிலையில் நாம் இருப்பதை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளன. இச்சம்பவத்திற்கு முதல்நாள் (ஏப்ரல் 30) சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சார்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் ஹுசேன் அளித்துள்ள தகவல்கள், நம் நாட்டைச் சூழ்ந்துள்ள பயங்கரவாத மேகம் குறித்த கவலைகளை அதிகப்படுத்தி உள்ளன...

........................................

....................

நமது கவலை இப்போது சென்னையில் நடந்துள்ள ரயில் குண்டுவெடிப்பு மட்டுமல்ல; இலங்கையைச் சார்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி கைதாகி இருப்பது மட்டுமே நம்மை அதிர்ச்சிகொள்ளச் செய்யவில்லை. இனிமேல் இத்தகைய அபாய நிகழ்வுகள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யும் திறன் இல்லாமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கக் கூடாது என்பதே நம் கவலை.....

முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

----------------------

விஜயபாரதம் (09.05.2014)

வியாழன், மே 01, 2014

வேரை அரிக்கும் கரையான்கள்

ஒருவழியாக 16வது லோக்சபா தேர்தலின் 6வது கட்டம் தமிழகத்தில் ஏப்ரல் 24-ல் முடிவடைந்துவிட்டது. மாநிலம் முழுவதும் 39 தொகுதிகளிலும் சராசரியாக 73 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கின்றன; புதுவை தொகுதியில் 82 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 1967-க்குப் பிறகு, அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்திருப்பதாக தேர்தல் ஆணைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆயினும் நூறு சதவிகித வாக்குப்பதிவு இன்னமும் நிறைவேறாத கனவாகவே இருக்கிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் உள்ள தொகுதிகளில் பதிவாகியுள்ள குறைந்தபட்ச வாக்குப்பதிவு ஏமாற்றம் அளிக்கிறது.
Polling

பெரிய அளவிலான எந்த அசம்பாவிதமும் இன்றி தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டாலும், இத்தேர்தலில் திணிக்கப்பட்டுள்ள பணப்பட்டுவாடா கலாச்சாரம், மிகுந்த அதிர்ச்சியையும் ஆயாசத்தையும் அளிக்கிறது. குறிப்பாக, ஆளுங்கட்சியினர் எந்த மனக்கிலேசமும் இன்றி பணத்தை வாக்காளர்களுக்கு வாரியிறைத்ததைக் கண்டபோது நமது மக்கள் மீதே கோபம் வந்தது...
 .
முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

----------------- 

விஜயபாரதம்  (02.05.2014)