திங்கள், ஜனவரி 07, 2013

ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? -3

அகற்றப்பட்ட உத்தப்புரம்  தீண்டாமைச் சுவர்

கூனிக் குறுகும் நமது முன்னோடிகள்…

நமது சமூக வீழ்ச்சியின் விளைவாக, நமது முன்னோடிகளான பல தேசத் தலைவர்களின் பிம்பம் ஜாதீயத் தலைவர்களாகக் குறுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் மிகவும் விசனத்துக்குரிய விஷயம். நாட்டு நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் போராடிய அந்தத் தலைவர்கள் இன்று இருந்திருந்தால், முச்சந்திகளில் நிற்கும் தங்கள் சிலைகள் போலவே கல்லாய் சமைந்திருப்பார்கள்....

இதுதான் நமது வீழ்ச்சியின் காரணம். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரையும், வ.உ.சிதம்பரம் பிள்ளையையும், டாக்டர் அம்பேத்கரையும், கர்மவீரர் காமராஜரையும், தீரன் சின்னமலையையும், திருப்பூர் குமரனையும், ஜாதி வட்டாரத்தில் திணித்துவிட்டோம். நம்மைப் பிணைக்கும் அன்பான தளைகளையே நம்மைப் பிரிக்கும் வேலிகள் ஆக்கி விட்டோம். நமக்கு கிடைக்குமா மீட்சி?....
 
-----------------------------
முழு கட்டுரையைக் காண்க:  தமிழ் ஹிந்து 

புதன், ஜனவரி 02, 2013

ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? -2



வெறுப்பை விதைக்கும் சுயநலவாதிகள்…

முந்தைய பகுதி 

எந்த ஒரு விளைவுக்கும் காரணம் இருக்கும். அதுபோல தமிழகத்தின் ஜாதிக் கலவர சீரழிவுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தவர்கள் நமது அரசியல்வாதிகள் தான். திமுகவின் கருணாநிதி முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அவரை, யாரையும் இந்தக் குற்றச்சாட்டில் இருந்து விடுவித்துவிட முடியாது....
...............................................
தமிழகத்தின் தற்போதைய சாபக்கேடு, தேர்தல் அரசியலில் களம் காணும் பல அரசியல் கட்சிகள் ஜாதியை அடித்தளமாகக் கொண்டு இயங்குவது தான். இந்தக் கட்சிகளை திமுக, அதிமுக இரு கட்சிகளும் மாறி மாறி அரவணைத்து, அவர்களுக்கு சமூகத்தில் இல்லாத மரியாதையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இதுவே ஜாதி அரசியலை தமிழகத்தில் ஊக்குவிக்கிறது. இது ஒருவகையில் புரையோடி இருக்கும் புண்ணைக் கிளறிவிடும் வேலை....

--------------------------
முழு கட்டுரையைக் காண்க:    தமிழ் ஹிந்து 
.