திங்கள், செப்டம்பர் 26, 2011

மோடியின் உண்ணாவிரதமும் தொப்பிக் கதைகளும்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது 61வது பிறந்த நாளை முன்னிட்டு மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தது தேசிய அரசியல் களத்தில் புதிய சுறுசுறுப்பைக் கூட்டி இருக்கிறது. 'காய்த்த மரம் தான் கல்லடி படும்' என்பது போல, வழக்கமாக மோடியை விமர்சிக்கும் கட்சிகளும் ஊடகங்களும், இப்போதும் தங்கள் கடமையை செவ்வனே செய்தன. மோடியும் தனக்கே உரித்தான நிதானத்துடன், தேசத்தின் முன்னேற்றத்துக்கான அறைகூவலை குஜராத் உண்ணாவிரதப் பந்தலிலிருந்து விடுத்தார்...........
............
மோடி மீது மாநில அளவிலும் தேசிய அளவிலும் கடுமையான குற்றச்சாட்டுகளுடன் துஷ்பிரசாரம் நடந்தது. முஸ்லிம் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்ய விரும்பும் கட்சிகளின் எளிய இலக்காக மோடி இருந்தார். ஆனால், மோடி எதைப் பற்றியும் கவலையின்றி மாநில முன்னேற்றம் ஒன்றே குறியாகக் கொண்டு செயல்பட்டுவந்தார். அவரது தனிப்பட்ட ஆளுமை, நேர்மை, ஊழலுக்கு இடங்கொடாத துணிவு, தேசபக்தி, பேச்சாற்றல் போன்ற காரணிகளால், குஜராத் மாநிலம் மிக விரைவில் நாட்டின் முதல்தர மாநிலமானது. வெளிப்படையான நிர்வாகம், அரசு அலுவலகங்களில் ஊழலைக் கட்டுக்குள் கொண்டுவந்தது, பராபட்சமற்ற செயல்பாடு, அரசில் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தாமல் தடுத்தது, நீர் மேலாண்மை, தொழில்துறை வளர்ச்சியில் அதீத கவனம், மகளிர் மேம்பாடு, விவசாய மேம்பாட்டிற்கான திட்டங்கள்,... என குஜராத் மாநிலம் நாட்டிற்கே முன்னுதாரணமாக மாறியது. எல்லாப் புகழும் நரேந்திர மோடிக்கே!.......
..........
இவ்வாறாக, அடுத்தடுத்து மோடியைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் விரயமான நிலையில், மத்திய அரசுக்கு தனது உண்ணாவிரதம் வாயிலாக அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் மோடி. தனது பிறந்த நாளான செப். 17 முதல் மூன்று நாட்கள், 'சத்பாவன மிஷன்' என்ற பெயரில் நல்லிணக்கத்துக்காக உண்ணாவிரதம் இருப்பதாக அவர் அறிவித்தபோது, காங்கிரஸ் அதிர்ந்தது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் வழக்கம்போல வார்த்தை ஜாலங்களால் மோடியை குறை கூறினார்கள். மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சங்கர் சிங் வகேலா களம் இறக்கப்பட்டார். அதைக் காணவே பரிதாபமாக இருந்தது.....
......................

-------------------------------------

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

விஜயபாரதம் (07.10.2011)



செவ்வாய், செப்டம்பர் 13, 2011

திருடன் கையில் சாவி: தொடரும் காங்கிரஸ் சாகசம்


மக்களவையில் லஞ்சப்பணத்தை காட்டிய பாஜக உறுப்பினர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்ட சமாஜ்வாதி முன்னாள் தலைவர் அமர்சிங்குடன், இந்த முறைகேட்டை அம்பலப்படுத்திய பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருப்பது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் பிரசார யாத்திரை நடத்த உள்ளதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி அறிவித்துள்ளது, சூழலின் மிக மோசமான நிலவரத்தை வெளிப்படுத்தி இருக்கிறது......................
................................................
........................................
...........காவல்துறையின் பாரபட்சமான அணுகுமுறை இவ்வளவு பட்டவர்த்தனமாக வெளிப்பட்டும் கூட, 'திருவாளர் புனிதர்' மன்மோகனும் அவரது அரசும் எந்த வெட்கமும் இன்றி ஆட்சியில் தொடர்கின்றனர். இதற்கு எதிராகவே நாடாளுமன்ற மக்களவையில் முழங்கினார் பாஜக மூத்த தலைவர் அத்வானி. ''நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தவர்கள் பலர் இதே அவையில் அமர்ந்திருக்கின்றனர். ஆனால், அந்த ஊழலை இதே அவையில் அம்பலப்படுத்திய பாஜக முன்னாள் எம்பி.க்கள் இருவர் இப்போது சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டுக்கும் ஜனநாயகத்துக்கும் சேவை செய்த அவர்களது செயல் குற்றம் என்றால், அவர்களுக்கு அனுமதி அளித்த நானும் குற்றவாளியே. ஆகவே என்னையும் கைது செய்யுங்கள்!'' என்று ஆவேசத்துடன் அரசுக்கு சவால் விடுத்தார் அத்வானி. அரசோ உலக்கையை விழுங்கியவன் போல அமைதி காக்கிறது......................

-------------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
விஜயபாரதம் (17.09.2011)
.

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

லோக்பால் மசோதா: ஹசாரே போராட்டம் வெற்றியா?

எதிர்பார்த்ததுபோல சமூகசேவகர் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் முழுமையான வெற்றியைப் பெற முடியாமல் போனாலும், நாடு முழுவதும் தேசபக்தியை கிளறச் செய்ததில் பெரும் பங்காற்றியுள்ளது. இமயம் முதல் குமரி வரை, குஜராத் முதல் அருணாச்சல் வரை, ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆதரவாகக் கிளம்பிய நாட்டுமக்கள் 'வந்தேமாதரம்!', 'பாரத் மாதா கி ஜெய்!' ஆகிய கோஷங்களை விண்ணதிர எழுப்பி, ஊழல்மயமான மத்திய அரசை நிலைகுலையச் செய்தார்கள். ஆரம்பத்தில் ஹசாரே குழுவை பகடி பேசிய காங்கிரஸ் கும்பல், மக்கள் எழுச்சி கண்டு மிரண்டது; பிறகு வழிக்கு வந்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கண்டிப்பான அணுகுமுறையும் காரணம் எனில் மிகையில்லை.

கடந்த ஐந்தாண்டுகளாக நமது நாட்டிற்கு போதாத காலம். அடுத்தடுத்து வெளிவந்த பல்லாயிரம் கோடி ஊழல்களால் மக்கள் வெகுண்டு போயிருந்தார்கள். ரூ. 1.76 லட்சம் கோடி இழப்புக்குக் காரணமான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு மோசடி, 'ராசா’வாக அவதாரம் எடுத்தது. காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாடுகளில் ஊழல், கார்கில் வீரர் குடியிருப்பில் ஊழல், இஸ்ரோ அலைக்கற்றை ஊழல் என, ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த ஊழல்களால் நாட்டுமக்கள் நம்பிக்கை இழந்திருந்தார்கள். ஆனால், அரசைக் கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகளை வக்கணையாக விமர்சித்தபடி, சிறுபான்மையினர் ஆதரவு கோஷங்களுடன் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தது மன்மோகன் அரசு. இந்த நிலையில்தான், ஊழலுக்கு எதிரான களப்போராளியாக ஏற்கனவே சிறு வெற்றிகளை அடைந்திருந்த சமூக சேவகர் அண்ணா ஹசாரே தலைமையில் ஒரு குழு ஊழலுக்கு எதிரான வலிமையான குரலுடன் களம் கண்டது.............

....................................................


ஆனால், ஊழலுக்கு எதிரான போர் அவ்வளவு எளிதாக முடிந்துவிடாது. ஊழல் புரிந்தவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது அவ்வளவு எளிதாக பதவியிலிருந்து விடுபட ஒத்துழைக்க மாட்டார்கள். தலித் தலைவர் உதித்ராஜைத் தூண்டிவிட்டு ‘பகுஜன் லோக்பால் மசோதா’ என்ற ஒன்றை புதிதாகப் புகுத்துபவர்கள் ஆளும் தரப்பினரே என்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை. பல ஊழல் வழக்குகளை ஒன்றுமில்லாமல் ஆக்குபவர்கள் மற்றும் எதிரணியினரை கீழ்மைப்படுத்தி அரசியல் சாகசம் செய்பவர்களிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். பதுங்கியுள்ள காங்கிரஸ் நரி எப்போது வேண்டுமானாலும் பாயலாம். அதை ஹசாரே குழுவினர் உணர்வது நல்லது....


------------------------------------

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

.