வெள்ளி, டிசம்பர் 10, 2010

அவன் நம்மவன்.. ..அவன் நம்மவன்…


அவன் நம்மவன்... அவன் மன்மதன்...

அகங்காரத்தை நடிப்பில் மறைக்கும் காமுகன்
அவலமே வாழ்க்கையாகக் கொண்டவன்.
அவனை நம்பிவந்த பெண்கள் அபலைகள்.
இனியும் நம்பும் ரசிகர்களும் கோமாளிகள்.
அவன் நம்மவன்.. ..அவன் நம்மவன்…
பகுத்தறிவுத் தாத்தாவின் பேரனின் கணவன்.
முற்போக்குத் திலகத்தின் பேரனின் கணவன்…
.
மனம் முழுவதும் காமம் வழிபவனிடம்
மலரினும் மெல்லிய குறள் எடுபடுமோ?
அழகிய மலரிலும் காம்பே பிடிக்கும்
உன்மத்தனுக்கு விருது கிடைக்குமோ?
மனமே வக்கரித்துப்போன வயசாளியிடம்
வக்கனை மட்டுமே கவியாய் விடைக்குமோ?
என்ன இருந்தாலும் அவன் நம்மவன்..

‘தான்திருடி’ மற்றோரை இகழ்தலும் இயல்பே.
இல்லறம் கெட்டவர் கழிசடையாவதும் இயல்பே.
நாய் வாலை நிமிர்த்துதல் இலமே.
ஆயினும் அவன் நம்மவன்.
அவன் வாலை அறிதலும் இலமே.
அவன் வாலை அரிதலும் இலமே.

- ‘ரதி அன்பு’ படப் பாடல்.
(கவிமாமணிகள் காலி, மைரமுத்து ஆகியோரால் பாராட்டப்பட்டது)

-------------------
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக