புதன், அக்டோபர் 29, 2014

தொடரும் பாஜக-வின் வெற்றிநடை!




அக்டோபரில் கிடைத்த இரு மாநிலத் தேர்தல் முடிவுகளால் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் புத்துணர்வு கொண்டிருக்கிறது. லோக்சபா தேர்தலில் அபார வெற்றிபெற்ற பிறகு நடந்த சில இடைத்தேர்தல்களில் பாஜக எதிர்பார்த்த வெற்றி பெறாமல் போனதால் கும்மாளமிட்ட அதன் அரசியல் எதிரிகள் இப்போது வாயடைத்துப் போயிருக்கின்றனர்.
........

மஹாராஷ்டிராவில் பதிவான வாக்குகளில் பாஜக 42.4 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருப்பது சாதரணமானதல்ல; முன்னர் 16 சதவீதமாக இருந்த அதன் வாக்குவிகிதம் இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. ஹரியானாவிலும் 4 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்குவிகிதம் இப்போது 52.2 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவது பாஜகவின் முதற்பெரும் கடமை.
.....

மக்கள் கோஷங்களையல்ல, வழிகாட்டும் தலைமையையே நம்புகிறார்கள். சிறந்த தலைமை, தொண்டர்களின் அர்ப்பணிப்பான செயல்பாடு, அரசியலில் நேர்மை, தெளிவான அரசியல் நிலைப்பாடுகள், நேர்த்தியான பிரசாரம், இவை அனைத்தின் உறுதியான ஒருங்கிணைப்பு – இவையே பாஜகவின் வெற்றிக்குப் பிரதான காரணங்கள். இந்த வெற்றிகள் தொடரட்டும்.

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

----------------
விஜயபாரதம் (07.11.2014)
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக