புதன், அக்டோபர் 22, 2014

வாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது



-கிரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமார்



எழுத்தாளர் ராஜேஷ்குமாரை தமிழ் எழுத்துலகில் அறியாதவர் யாரும் இருக்க முடியாது. 1,500க்கு மேற்பட்ட குற்றப்புனைவு (கிரைம்), அறிவியல் புனைவு புதினங்கள், 2,000க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள ராஜேஷ்குமார் (66), உலக சாதனையாளர். தேசிய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் கூட இவரது எழுத்துலக சாதனையை முறியடிக்க நீண்டகாலம் ஆகும். 
கோவையில் வசிக்கும் அவர் விஜயபாரதம் தீபாவளி மலருக்கு அளித்த சிறப்பு நேர்காணல் இது. தமிழ் ஹிந்து இணையதளத்தில் இதன் முழு வடிவம் வெளியாகி உள்ளது.
  


உங்களது எழுத்துலகப் பிரவேசம் எப்படி நிகழ்ந்தது?

நான் கல்லூரியில் படிக்கும்போதே எழுதத் துவங்கிவிட்டேன். 1966-ல் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது எழுதிய முதல்கதை (உன்னை விட மாட்டேன்) கோவையில் வெளியாகும் ‘மாலைமுரசு பத்திரிகையில் வெளியாகி ரூ. 10 பரிசைப் பெற்றுத் தந்தது. அதைப் பார்த்து நண்பர்கள் பலரும் என்னை ஊக்குவித்தனர். தொடர்ந்து பல இதழ்களில் எழுதி வந்தேன்.

அந்தச் சமயத்தில் அறிமுக எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியை தினமணிக்கதிரில் அதன் ஆசிரியர் சாவி நடத்தினார். அதில் என் கதை தேர்வாகி (நானும் ஒரு ஹீரோ தான்) வெளிவந்தது. அதன் பிறகு சாவி, ராணி பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதி வந்தேன்....


முழு நேர்காணலைக் காண்க: 

தமிழ் ஹிந்து (முதல் பகுதி)

தமிழ் ஹிந்து (இரண்டாம் பகுதி)


--------------------

விஜயபாரதம் தீபாவளி மலர்-2014


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக