திங்கள், ஜூலை 29, 2013

மறக்குமா இந்த மாபாதகங்கள்?... தொடரும் படுகொலைகள்!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ஹிந்து இயக்கத் தலைவர்கள் மீது நடைபெற்றுள்ள தாக்குதல்கள்:

1. டாக்டர் அரவிந்த ரெட்டி கொலை: 
arvind1

வேலூர், கொசப்பேட்டை பகுதியில் கடந்த 2012, அக்டோபர்-23ம் தேதி அன்று தமிழக பா.ஜ.க. மருத்துவ அணித் தலைவர் டாக்டர் அரவிந்த் ரெட்டி தமது மருத்துவமனைக்கு முன்பாக மூன்று நபர் கும்பலால் கொல்லப்பட்டார். இவ்வழக்கு காவல்துறையால் திசைதிருப்ப்ப்பட்டுவிட்டது.

காண்க:

2. பாஜக நிர்வாகிகள் நாகை புகழேந்தி,  பரமக்குடி முருகன், ஆகியோர் 2012, 13-ல் கொலை செய்யப்பட்டனர்.

3. ஆர்.எஸ்.எஸ். மாவ்ட்டச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல்:

ஆர்.எஸ்.எஸ். திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆனந்த், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் 2012, நவம்பர் 6-ல் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானார். பலத்த காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.

காண்க:


4.இந்து முன்னணி நிர்வாகி மீது கொலைவெறித் தாக்குதல்:

Manjunath
நீலகிரி மாவட்டத்தில், உதகையில் 2013, ஏப்ரல் 15-ல் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மஞ்சுநாத் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இக்கொலை தொடர்பாக தமுமுக-வைச் சார்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்தத் தாக்குதல் குறித்த வலைப்பதிவு கட்டுரை:

5. இந்து முன்னணி நிர்வாகிகள் மீது மீண்டும் கொலைவெறித் தாக்குதல்கள்:


நீலகிரி மாவட்டம், குன்னூரில், 2013, ஏப்ரல் 16-ல் இன்னொரு மாவட்டச் செயலாளர் ஹரிஹரன், ஹிந்து முன்னணி தொண்டர்கள் வெங்கட்ராஜ், ஜெயகுமார் ஆகியோர் முஸ்லிம் குண்டர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 12 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஹரிஹரனும், ஜெயகுமாரும் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

காண்க:

6.பாஜக தலைவர் மீது தாக்குதல்:

bjp_leader_m.r.gandhi
நாகர்கோவிலில் பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி 2013, ஏப்ரல் 21-ல் மர்ம நபர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் பிழைத்தார்.

7.வெள்ளையப்பன் படுகொலை:

இந்து முன்னணி மாநிலச் செயலாளர் சு வெள்ளையப்பன், வேலூரில் 2013, ஜூலை 21-ல் கொடூரமாக்க் கொல்லப்பட்டார். இது தொடர்பாக முஸ்லிம் அமைப்பைச் சார்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்படுகொலை தொடர்பான இரு பதிவுகள்: 

8.ஆடிட்டர் ரமேஷ் படுகொலை: 


பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் அவரது வீட்டிலேயே, 2013, ஜுலை 19-ம் தேதி இரவு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

காண்க:

------------------
தமிழ் ஹிந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக