செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

தர்ம யுத்தம் வென்றது!

''அதர்மம் எப்போதெல்லாம் ஓங்குகிறதோ, அப்போதெல்லாம் நான் தர்மத்தைக் காக்க அவதரிப்பேன்'' என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியதன் உட்பொருளை ராம்லீலா மைதானத்தில் சமூக சேவகர் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் வெளிப்படுத்தி இருக்கிறது. கலியுகத்தில் சங்கமே சக்தி என்று நாம் கேட்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவரிலும் இறைசக்தி குடிகொண்டிருக்கிறது என்கிறோம். ஆனால், ஊழலுக்கு எதிரான போரில் அண்ணா ஹசாரே புதிய அவதாரம் எடுக்கும்வரை, இவற்றை யாரும் நம்பி இருக்கவில்லை.

காலம், தனக்குத் தேவையான மாற்றங்களை நிகழ்த்த வல்ல தலைவர்களை அவ்வப்போது உருவாக்கிக்கொண்டு தான் இருக்கிறது. திலகருக்குப் பின் விடுதலைப் போராட்டம் என்ன ஆகுமோ என்ற நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் தான் மகாத்மா காந்தி இந்திய அரசியலில் பிரவேசித்தார். அவரை பக்குவப்படுத்திய தென்னாப்பிரிக்க போராட்டங்களை அப்போது இந்தியர்கள் அறிந்திருக்கவில்லை. அதுபோலவே, இப்போதும் புதிய மக்கள் தலைவராக அண்ணா ஹசாரே உருவாகி இருக்கிறார். இதற்காக அவர் ராலேகான் சிந்தியில் நிகழ்த்திய தவத்தை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை....

காண்க: தமிழ் ஹிந்து
---------------------------
விஜயபாரதம் (02.09.2011)

தொடர்புடைய இடுகைகள்:
* காரணத்திலும் தெளிவில்லை; காரியத்திலும் ஜெயமில்லை.
* யோகியின் புரட்சிக்குரல்
* அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்

..

1 கருத்து:

  1. உங்கள் கருத்து சரியானதே..காங்கிரஸ் இருக்கும் வரை இது சாத்தியமா?---இந்த “தீ “ அணையாமல் காப்போம்..துஷ்டரை சாம்பலாக்கும் வரை ஓயாமல் உழைப்போம்--
    அன்புடன்
    எஸ்.ஆர்.சேகர்

    பதிலளிநீக்கு