திங்கள், அக்டோபர் 15, 2012

தள்ளாடும் அரசு, தடுமாறும் அமைச்சர்கள்


“அடிக்கடி பிள்ளைப்பேறு, அன்னையின் உடல்நலத்துக்குக் கேடு” என்ற விளம்பர வாசகத்தைக் கேள்விப்பட்டிருக்கலாம். அதுபோலவே, அடிக்கடி அமைச்சரவை மாற்றங்கள் நிகழ்வது அரசின் நிர்வாகத்துக்குக் கேடாக முடியும். தமிழக அமைச்சரவை எட்டாவது முறையாக (அக். 5  நிலவரம்) மாற்றி அமைக்கப்பட்டிருப்பது, அரசின் நிர்வாகம் எந்த அளவுக்குக் குலைந்துள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது.

ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு மூன்றாவது முறையாக மே 16, 2011-இல் பதவியேற்றது. அதில் 34 பேர் அமைச்சர்களாக இடம் பெற்றார்கள். அதில் இதுவரை 15 பேர் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் விபத்தில் காலமான மரியம் பிச்சை, உடல்நலக்குறைவால் இறந்த ஜி.கருப்புசாமி ஆகியோரைத் தவிர்த்து, மீதமுள்ள 13 பேரும் முதல்வரின் அதிருப்தி காரணமாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். பதவி இழந்தவர்களில் சிவபதிக்கு மட்டுமே மீண்டும் அமைச்சராகும் அதிர்ஷ்டம் வாய்த்தது. இதுவரை அதிமுக அமைச்சரவையில் அமைச்சர் பதவி பெற்றவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இன்னமும் 100 பேர் அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினர்களாக- அமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்...

-----------------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 
விஜயபாரதம் (19.10.2012 )
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக