திங்கள், பிப்ரவரி 21, 2011

திருப்பூர் - திரும்ப முடியாத பாதையில்... (பகுதி 1)


''செருப்புக்குத் தோல் வேண்டியே - இங்கு கொல்வரோ
செல்வக் குழந்தையினை?''
- என்று பாடுவார் மகாகவி பாரதி, பாஞ்சாலி சபதத்தில்.

சூதில் தோற்ற தருமன் திரௌபதியைப் பணயம் வைத்தபோது, வெகுண்டு பாடும் பாரதியின் ஆவேச வார்த்தைகள் இவை.

தொழில்நலத்திற்காக, உலகச் சந்தையில் வெல்வதற்காக, சொந்தநாட்டு மண்ணை மலடாக்கிய திருப்பூர்த் தொழில்துறையினரின் சுயநலத்தைக் காணும்போது, பாரதியின் மந்திர வார்த்தைகள் தாம் நினைவுக்கு வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உயர் நீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு, ஒட்டுமொத்த திருப்பூரையும் நிலைகுலையச் செய்துள்ளது.

பின்னலாடை ஏற்றுமதியில் உலக அளவில் முத்திரை பதித்துவரும் திருப்பூர் நகரம், நாட்டிற்கு ஆண்டுதோறும் ரூ. 14,000 கோடி அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் உழைப்பாளிகளின் நகரம், நாட்டு மக்களின் உள்ளாடைகளை ஆண்டுதோறும் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பில் உற்பத்தி செய்துவரும் தொழில்முனைவோரின் நகரம், இதற்காக இழந்தது மிக அதிகம். அதன் அடையாளம்தான், சாக்கடை ஓடையாக ஓடிக் கொண்டிருக்கும் ஜீவநதியான நொய்யல்....

------------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
நன்றி: சுதேசி செய்தி
.

1 கருத்து: