சனி, அக்டோபர் 12, 2013

பயங்கரவாதிகள் கைது: தமிழக அரசுக்கு நன்றி!

 
காவல் ஆய்வாளர் லட்சுமணனுக்கு முதல்வர் நன்றி!

இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளின் கொலைகள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலமாக, மாநிலத்தின் அமைதிக்கு விடுக்கப்பட்ட சவால் முறியடிக்கப்பட்டிருக்கிறது....

எனினும், அபுபக்கர் சித்திக் என்ற கொடிய பயங்கரவாதி போலீஸாரின் வலையிலிருந்து தப்பி இருக்கிறான். அவன் சிக்கினால் தான், பயங்கர நாசவேலைகளை வேருடன் கிள்ளி எறிய முடியும். இந்த பயங்கரவாதிகள் அனைவருக்கும் பாகிஸ்தான் ஆதரவு அமைப்பினரின் ஆதரவு இருப்பதை அறிந்து காவல்துறை அதிர்ச்சியில் உள்ளது. இவர்களிடம் விசாரனை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பினரும் (NIA) வந்துள்ளனர்....

மொத்தத்தில், நடந்துள்ள நல்ல செயல்கள் மிகத் தாமதமாயினும், இப்போதேனும் நடந்திருக்கிறதே (Better than Never) என்று நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்துள்ளன. பிடிபட்டுள்ள பயங்கரவாதிகள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் விசாரணையைத் துரிதப்படுத்தி, நாசகாரக் கூலிப்படையினர் அனைவரையும் கைது செய்வது தமிழக அரசின் கடமை.

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

--------------------------
விஜயபாரதம் (25.10.2013)

சனி, செப்டம்பர் 28, 2013

இலங்கைத் தமிழர் வாழ்வில் புதிய ஒளிக்கீற்று!



கடந்த 30 ஆண்டுகளாக உள்நாட்டுப் போராலும், நிச்சயமற்ற அரசியல் சூழலாலும் பந்தாடப்பட்ட இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வில் புதிய அத்தியாயம் மலர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வடக்கு மாகாணத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களில் வென்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழரின் வாழ்வில் புதிய நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கியுள்ளது....

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

-----------------------
விஜயபாரதம் (11.10.2013)