வியாழன், ஜூன் 05, 2014

பாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு


பாரதப் பிரதமராக மோடியை ஏகோபித்த ஆதரவுடன் இந்தியா தேர்ந்தெடுத்துவிட்டது. இதுவரை காணாத வகையில் பாஜக மட்டுமே தனித்து 282 இடங்களில் வென்றதுடன், மொத்தத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களில் வென்றுள்ளது. அதேசமயம், தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் மட்டும் பாஜகவால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. இம்மாநிலங்களின் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க வேண்டிய தருணம் இது.

இம்முறை நாடு முழுவதுமே பாஜக வலுவாகக் காலூன்றி உள்ளது. மோடியே சொன்னது போல, இது காங்கிரஸுக்கு எதிரான அலை மட்டுமல்ல, பாஜகவுக்கு ஆதரவான அலையும் கூட. அதனால் தான் இதுவரை கணக்கைத் துவங்காத பல பிரதேசங்களிலும் பாஜக வெற்றி கண்டுள்ளது.

மணிப்பூர், மிசோரம், சிக்கிம், மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் தோல்வி எதிர்பார்க்கப்பட்டதே. பெரிய மாநிலங்களில் கேரளத்தில் மட்டுமே பாஜகவால் சாதிக்க முடியவில்லை. தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் பெரும் வெற்றி பெறாவிட்டாலும், தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளது பாஜக.

ஆந்திரத்தின் சீமாந்திரா பகுதியில் பாஜக- தெலுங்கு தேசம் கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில்,  தெலங்கானா பகுதியில் அம்மாநிலத்தின் உதயத்திற்குப் போராடிய தெலங்கானா ராஷ்டிர சமிதி பெரும் வெற்றி பெற்றுள்ளது.  எதிர்பார்த்தது போலவே,  இம்மாநிலத்தின் இரு பகுதிகளிலும் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டுள்ளது. மாறாக பாஜக இரு பிரதேசங்களிலும் தனது வெற்றிகளை உறுதியாகப் பதிவு செய்துள்ளது. இம்மாநிலத்தில் தே.ஜ.கூட்டணி  37.6% வாக்குகளுடன், 19 தொகுதிகளில் வென்றுள்ளது.
.................................
................

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

-------------------
விஜயபாரதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக