சனி, டிசம்பர் 28, 2013

லோக்பால்: கனவு நிறைவேறுமா? -2


.....மொத்தத்தில், சட்டப்பூர்வமாக ஒரு கடிவாளச் சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. அரசு ஊழியர்களின் கருணையற்ற போக்கிற்கு தடைக்கல்லாக லோக்பால் இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. எனினும் இதன் வெற்றி, சாமானியரான மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதில் தான் உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டமும் லோக்பால் சட்டமும் இணைகோடுகளாகப் பயணிக்கக் கூடியவை. எனவே, இவற்றை முழுமையாக அறிந்துகொண்டு, தக்க முறையில் பயன்படுத்தும் விழிப்புணர்வுள்ள மக்களால் தான் ஊழலை ஒழிக்க முடியும்.

லோக்பால் சட்டம் வெறும் அலங்காரக் கண்காட்சி அல்ல; அரசு பிரதிநிதிகளின் அகங்காரத்தைத் தடுக்கும் கேடயமாகவும் வாளாகவும் விளங்கும் கூர்மையான ஆயுதம் இது. பலவானின் கரத்தில் தான் ஆயுதம் அர்த்தம் பெறும். எனவே மக்களை விழிப்புணர்வுள்ள பலவான் ஆக்குவதே சமூக மாற்றம் விரும்புவோரின் எதிர்காலக் கடமையாக இருக்கும்...

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

-------------
விஜயபாரதம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக