திங்கள், செப்டம்பர் 20, 2010

எல்லாப் புகழும் விநாயகனுக்கே!

கோவை- செல்வபுரம், கல்லாமேடு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட விநாயகர் சிலையை
காவல்துறையினர் அகற்றுவதைத் தடுக்க, சுற்றிலும் அணிவகுத்திருக்கும் பக்தர்கள்.
மீண்டும் கலவரபூமி ஆகிறது கோவை!


கோவையில்
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முஸ்லிம் அமைப்புகளும் காவல்துறையும் கடும் பிரச்னைகளை பல இடங்களில் ஏற்படுத்தின. பல இடங்களில் விநாயகர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் நடத்திய அமளியால் கலவர அச்சம் ஏற்பட்டது. காவல்துறை முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு அஞ்சி, இந்துக்களையே மிரட்டிப் பணியவைக்க முயன்றது. இந்த சம்பவங்கள் அனைத்தும் 1998 குண்டுவெடிப்புக்கு முந்தைய கோவையை நினைவு படுத்துகின்றன. கோவையில் இந்த ஆண்டு நடந்த, தவிர்த்திருக்கப்பட வேண்டிய சில சம்பவங்கள் இதோ...

1. செல்வபுரம்:

செல்வபுரம், கல்லாமேடு , பண்ணாரி மாரியம்மன் கோயில் அருகே, கடந்த பத்தாண்டுகளாக விநாயகர் சிலை வைத்து விழா கொண்டாடப்பட்டுவந்தது. ஆனால் இம்முறை அங்கு சிலை வைக்க காவல்துறை அனுமதி மறுத்தது. இதற்கு காரணம், அங்கிருந்த இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பே. 'முஸ்லிம்கள் அதிகமாக குடியிருக்கும் பகுதியில் பிள்ளையார் சிலை வைக்கக் கூடாது; மீறினால் அதை நாங்களே அப்புறப்படுத்துவோம்' என்று அவர்கள் காவல்துறையினரை மிரட்டியதாக தகவல்.

நியாயமாகப் பார்த்தால், தங்களை மிரட்டிய முஸ்லிம் அமைப்புகள் மீது தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், முதுகெலும்பில்லாத காவல்துறை, அந்த இடத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டைக்கு அனுமதி மறுத்தது. தடையை மீறி பக்தர்கள் அங்கு சிலை வைத்தனர். அதனை அகற்ற காவல்படை களமிறங்கியது. ஆனால் இந்து சமுதாயம் சோரம் போய்விடவில்லை என்பது அங்கு நிலைநாட்டப்பட்டது.

விநாயகர் சிலையை அகற்றுவதைத் தடுக்க, 50க்கு மேற்பட்ட பெண்கள் விநாயகரைச் சூழ்ந்து கோட்டையாகக் காத்து நின்றனர். சிலர் விநாயகர் சிலையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு காவல்துறையினர் சிலையைத் தொடுவதைத் தடுத்தனர். வேறு வழியின்றி பெண்காவலர்கள் உதவியுடன் அவர்களை கைது செய்து, அவர்களுடன் சிலையையும் காவல் வாகனத்தில் ஏற்றினர். இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 91 பேரும் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையை (10.09.2010) எதிர்த்து 141 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பி.ஆர்.எஸ். மைதானத்தில் காவலில் வைக்கப்பட்டனர். அங்கு போலீஸ் காவலிலும் அவர்கள் உண்ணாவிரதம் இருந்ததால், மூன்று பெண்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். வேறு வழியின்றி பக்தர்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இறுதியில், பண்ணாரி மாரியம்மன் கோயில் பகுதியிலே சில அடிதூரம் தள்ளி (கீழே விழுந்தாலும் போலீஸாரின் மீசையில் மண் ஒட்டிவிடக் கூடாது) விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய காவல்துறை அனுமதி கொடுத்தது. கைது செய்யப்பட அனைவரும் அன்றிரவு 10 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

இங்கு போராடிக் கொண்டிருந்த இந்துமுன்னணியினரை மிரட்டிய கோவை காவல் உதவி ஆணையர் பாலாஜி சரவணன், '' நீங்கள் கட்டியுள்ள காவிக் கொடிகளை நீங்களே அகற்றிவிடுங்கள்; இல்லாவிட்டால் முஸ்லிம்கள் அவிழ்த்து விடுவார்கள்'' என்று கூறியது அவலத்தின் உச்சம். ஆயினும், வழிபாட்டு உரிமைக்காக செல்வபுரம் பகுதி மக்கள் - குறிப்பாக ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்- நடத்திய போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றது. விநாயகர் சதுர்த்தி முடியும் தறுவாயில் தான் அங்கு விநாயகர் சிலை நிறுவப்பட்டது.

2. உக்கடம்- அல்அமீன் காலனி:

ஒருகாலத்தில் கரும்புக்காடாக இருந்த வயல்வெளி முஸ்லிம்களின் திட்டமிட்ட குடியேற்றத்தால் பெரும்பான்மை முஸ்லிம்களின் குடியிருப்பு பகுதி ஆகிவிட்டது. அல்அமீன் காலனி என்று அழைக்கப்படும் இங்கு மிக சொற்பமான எண்ணிக்கையிலேயே ஹிந்துக்கள் வசிக்கின்றனர். கோவை குண்டுவெடிப்பை அடுத்த கலவரங்கள் காரணமாக பல ஹிந்துக்கள் இங்கிருந்து வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்துவிட்டனர்.

இங்கு விநாயகர் சிலை வைக்க இந்து மக்கள் கட்சியினர் திட்டமிட்டனர்; அங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதை மீறி சிலர் அங்கு விநாயகர் சிலை வைக்க (11.09.2010) முயன்றபோது, சில முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அரசு அதிகாரிகளையே மிரட்டியுள்ளனர். பெரும் கலவரச் சூழல் ஏற்பட்டதால் அங்கு கோவை தெற்கு வட்டாட்சியரும் காவல் இணை ஆணையரும் வந்து பேச்சு நடத்தினர்.

அப்போது, ''அல்அமீன் காலனியில் உள்ள 15 இந்து குடும்பங்களையும் காலி செய்துவிடுவோம். அவர்கள் இங்கு இருப்பதால் தானே விநாயகர் சிலை வைக்க முயல்கிறார்கள்? ஒருவார காலத்திற்குள் அவர்களை துரத்தப் போகிறோம்'' என்று முஸ்லிம் பிரதிநிதிகள் வெளிப்படையாகவே மிரட்டியுள்ளனர். இதனை எந்த அதிகாரியும் கண்டிக்கவில்லை. இறுதியில், இங்கு இந்துக்கள் தரப்பில் 37 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு விநாயகர் சிலை வைக்க முடியவில்லை.

3. குனியமுத்தூர்:

குனியமுத்தூர், திருமூர்த்தி நகரில் முத்துமாரியம்மன் கோயிலில் விநாயகர் சிலை இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டது. அதன் அருகில் தாஜுல் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத் இருப்பதால் அங்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவல்துறை, முஸ்லிம்களுக்கு அஞ்சி பிள்ளையார் சிலையை கோயில் உள்ளே வைக்குமாறு வற்புறுத்தியது.

குனியமுத்தூரின் குறிஞ்சி நகரில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. அந்த இடம் பள்ளிவாசல் செல்லும் வழியில் இருப்பதாகவும், அதை அகற்றுமாறும் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே காவல்துறையினர் அங்குள்ள மக்களை மிரட்டி விநாயகர் சிலையைத் தூக்கிச் சென்று அருகிலுள்ள கோயிலில் வைத்துவிட்டனர். ஆனால், இந்துமுன்னணியினர் தங்கள் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட, மீண்டும் அதே இடத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். இதனால் பதற்றம் ஏறப்பட்டது. அங்கு குவிந்த முஸ்லிம் அமைப்புகளின் தொண்டர்கள் நூற்றுக் கணக்கானோர், கலவரச் சூழலை ஏற்படுத்தினர். இந்த சிலை வைக்க காரணமாக இருந்த இந்து முன்னணி தொண்டர்கள் வேலுமணி, ரவி ஆகியோரை காவல் உதவி ஆய்வாளர் காசிபாண்டியன் கைது செய்து அழைத்துச் சென்றார் (12.09.2010).

அப்போது ஒரு கும்பல் காவல்துறை அதிகாரி காசிபாண்டியனையும் அவருடன் வந்த போலீசாரையும் தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவர்கள் கண்ணெதிரிலேயே, இந்து முன்னணித் தொண்டர்கள் வேலுமணி, ரவி ஆகியோரை கடுமையாகத் தாக்கியது. (பலத்த காயம் அடைந்த அவர்கள் சிகிச்சை பெற்றனர்). மாநகர் காவல்ஆணையர் சைலேந்திரபாபுவே சம்பவ இடத்திற்கு வந்து தடியடி நடத்தி வன்முறைக் கும்பலைக் கலைத்தார். ஆயினும், இவ்வழக்கில் முஸ்லிம் தரப்பே தவறு செய்தபோதும், இருதரப்பு மோதலாக சித்தரித்து, முஸ்லிம்கள் 7 பேரையும் இந்துக்கள் 4 பேரையும் கைது செய்தனர். காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டது முற்றிலும் மறைக்கப்பட்டது.

இதை அடுத்து குனியமுத்தூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட 100 விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யாமல் இந்து முன்னணியினர் அதே இடங்களில் வைத்து சத்தியாக்கிரகம் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட நால்வரையும் ஜாமீனில் தற்போது (14.09.2010) காவல்துறை விடுவித்துள்ளது. அதன்பின் விசர்ஜன ஊர்வலம் நடந்து, குனியமுத்தூர் பிள்ளையார்கள் கரைக்கப்பட்டன. தாக்கப்பட்டவர்களையே காவல்துறை கைது செய்கிறது. தாக்கியவர்களைக் கண்டு காவல்துறை அஞ்சி நடுங்குகிறது.

4. மதுக்கரை:

மதுக்கரை, ஒன்றிய அலுவலகம் பின்புறமுள்ள பட்டத்தரசியம்மன் கோயில் வீதியில் அங்குள்ள பக்தர்களால் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதற்கு அங்குள்ள முஸ்லிம் காலனி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை பக்தர்கள் கண்டுகொள்ளவில்லை.

இதனால் கோபம் அடைந்த தவ்ஹீத் ஜமாஅத், எஸ்.டி.பி.ஐ கட்சியினர், விநாயகர் சதுர்த்தி விழாக்குழுவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரை கடுமையாகத் தாக்கினர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரது மனைவியை பிடித்து இழுத்து சாக்கடையில் தள்ளிய முஸ்லிம் கும்பல், அவரது சிறு குழந்தையையும் தாக்கியது. அப்போதும் வெறி அடங்காத கும்பலால் ஆறுமுகத்தின் மளிகைக்கடை சூறையாடப்பட்டது.
இங்கு பட்டத்தரசி அம்மன் கோயிலையும் தரைமட்டமாக்க ஒரு கும்பல் சென்றுள்ளது. காவல்துறை தடுத்ததால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. ஆறுமுகத்தின் கடை சூறையாடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மதுக்கரையில் 13.09.2010 அன்று முழுக் கடையடைப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தில் புகார் பெற மதுக்கரை காவல்துறையினர் மறுத்துவிட்டனர். இதுவரை ஆறுமுகம் குடும்பத்தைத் தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை.

5. சரவணம்பட்டி:

கணபதி, இ.பி.காலனியில் விளம்பர பேனர் வைப்பது தொடர்பான பிரச்னையில் இந்து முன்னணி தொண்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீராம், ரகு உள்ளிட்ட 7 பேர் சரவணம்பட்டி காவல்துறையினரால் (09.09.2010) கைது செய்யப்பட்டனர். புகார் கூறியவர்கள் சமரசமாகி, அதனை வாபஸ் பெற்றபோதும், இந்து முன்னணி தொண்டர்களை சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் சிவகுமார் விடுவிக்கவில்லை.

அவர்களை பீளமேடு காவல்நிலையம் கொண்டுசென்று சட்டவிரோதமாக லாக்அப்பில் அடைத்து கடுமையாகத் தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். மறுநாள் மதியம் வரை கடுமையாக இந்து முன்னணி தொண்டர்கள் தாக்கப்பட்டனர். நூற்றுக் கணக்கான இந்து முன்னணியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பிறகே, கைது செய்யப்பட்டவர்கள் மீது வேறு பொய்வழக்குகளை ஜோடித்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்கு அனுப்பினார், காவல் ஆய்வாளர் சிவகுமார்.

காவல்நிலையத்தில் இந்து முன்னணி தொண்டர்கள் பெற்ற காயங்களுக்கு சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதையும் காவல் ஆய்வாளர் செய்ய மறுத்து விட்டார். தற்போது காவல்துறையினர் தாக்கிய காயங்களுடன் கோவை சிறையில் வாடுகின்றனர் 7 இந்து முன்னணி தொண்டர்கள்.

6. இன்னும் பல இடங்கள்:


சுந்தராபுரம் - பிள்ளையார் புரத்திலும் விநாயகர் சிலை வைக்க அங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தன. சிவானந்தா காலனி அருகிலுள்ள கருணாநிதி நகரிலும் விநாயகர் சிலை வைக்க முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக காவல்துறையும் செயல்பட்டது. அங்கு முஸ்லிம் இயக்கங்களாலும் காவல்துறையாலும் இந்து இயக்க நிர்வாகிகள் மிரட்டப்பட்டனர்.

கோவை- பாலக்காடு சாலையில், ஆத்துப்பாலம் முதல் மைல்கல் வரை பல இடங்களில் இத்தகைய மிரட்டல்கள் இந்த ஆண்டு வந்துள்ளன. ஏதோ திட்டத்துடன் தவ்கீத் ஜமாஅத், த.மு.மு.க, மனிதநீதி பாசறை, எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் செயல்பட்டுள்ளது போலத் தோன்றுகிறது. முஸ்லிம்களின் அடாவடித்தனத்தை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறை இந்து முன்னணியினரையே மிரட்டுகிறது; பொய்வழக்கு போடுகிறது. கருணாநிதி தலைமையிலான அரசே இதற்கு காரணம்.

காரணம் என்ன?

இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டால், பெரும்பாலோர் மழுப்பியபடி தப்பிக்கிறார்கள். மனசாட்சியுள்ள ஒரு அதிகாரி சொன்ன தகவல் கடும் அதிர்ச்சி அளித்தது. விரைவில் தேர்தல் நிகழ உள்ளதால், விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்த பிரச்னை வந்தாலும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று வாய்மொழியாக தமிழக அரசிடமிருந்து உத்தரவு வந்துள்ளதாக அவர் கூறினார். இந்த விபரத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டுதான் முஸ்லிம் இயக்கங்கள் இம்முறை பல இடங்களில் பிரச்னை செய்துள்ளன.

அதிலும், ஒவ்வொரு முஸ்லிம் இயக்கமும் தங்களுக்குள் அதி தீவிரம் யார் என்று காட்டிக்கொள்ளவே பல இடங்களில் அமளியை ஏற்படுத்தினர். முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வாக்கு கிடைக்கும் என்ற மாயையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, பெரும் வன்முறைக்கு வித்திட்டுள்ளது தமிழக அரசு. இதேபோன்ற சூழல் தான், 1998 குண்டுவெடிப்புக்கு முன்னர் கோவையில் நிலவியது என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம.கோபாலன் சுட்டிக்காட்டியுள்ளார். (காண்க: நேர்காணல்).

தற்போது பற்றி எரியும் காஷ்மீரோ, ஏற்கனவே குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட கோவையோ, எந்தப் பகுதி ஆயினும், அரசின் செயல்பாடற்ற தன்மையே வன்முறைக் கும்பல்களுக்கு நீர் வார்க்கிறது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால், கோவை மக்கள், இந்த மதவெறுப்பு உமிழும் முஸ்லிம் இயக்கங்களையும் அவர்களுக்கு வால் பிடிக்கும் காவல்துறையினரையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டு, பெரும் ஆபத்துக்களை சந்தித்து நமது வழிபாட்டு உரிமையை நிலைநாட்டி இருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் எவரும் ஹிந்து பெரும்பான்மையான பகுதியில் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதில்லை. தினசரி ஐந்து வேளைத் தொழுகைக்காக ஒலிபெருக்கி வைத்து முஸ்லிம்கள் இறைவனிடம் இறைஞ்சுவது எந்த ஹிந்துவுக்கும் இதுவரை இடைஞ்சலாக இருந்ததில்லை. ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை விநாயகர் சிலை வைத்து வழிபட ஹிந்துக்களுக்கு அனுமதி மறுக்கும் முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகள், நமது பரந்த மனப்பான்மையையும் சமரச மனோபாவத்தையும் கேள்விக்கு உட்படுத்துகின்றன.

கோவையை மீண்டும் கலவர பூமி ஆக்க திட்டமிட்ட சதிகள் துவங்கிவிட்டது தெரிகிறது. முஸ்லிம்களின் அடாவடித்தனம், காவல்துறையின் பாரபட்ச அணுகுமுறைகளை பெரும் இன்னல்களுக்கு ஆளாகியும் சமாளித்துவரும் கோவை ஹிந்து சகோதரர்களுக்கு விநாயகர் அருள் மேலும் வலுவைக் கூட்டட்டும்.

பெட்டிச்செய்தி

மேட்டுப்பாளையத்தில் அவலம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணியினர் 8 இடங்களில் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்கள் ரம்ஜானுக்கு முந்தைய தினத்தில் (10 .09 .2010) கிழிக்கப்பட்டன. கிழித்தவர்கள் யார் என்று தெரிந்திருந்தும் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த ஆண்டு மேட்டுப்பாளையத்தில் நடந்த அமைதிக்கூட்டத்தில், எஸ்.பி. கண்ணன் முன்னிலையிலேயே, தங்கள் பகுதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யக் கூடாது என்று முஸ்லிம் அமைப்பின் பொறுப்பாளர் ஒருவர் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். யாரும் ஏன் என்று அவரை கேள்வி கேட்கவில்லை. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் நீங்கள் மட்டும் மசூதிகளில் 'வாங்கு' ஓதலாமா என்று கேட்கும் தைரியம் எந்த அதிகாரிக்கும் இல்லை.

ரம்ஜான் பண்டிகை (11.09.2010) தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்கள் (சுமார் 2,000 பேர்) எழுப்பிய கோஷத்தால் மிரண்ட மாட்டு வண்டி ஒன்று கூட்டத்தில் புகுந்தது. இதற்கு காரணம் இந்துமுன்னணி தான் (அவர்கள் தான் மாட்டுக்கு டாஸ்மாக் சரக்கு வாங்கி ஊற்றி கூட்டத்தில் துரத்தி விட்டார்களாம்!) என்று இஸ்லாமியர்களிடம் வதந்தியைப் பரப்பி, கலவரம் நடத்த மேட்டுப்பாளையத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நல்லவேளையாக, நல்லுள்ளம் கொண்ட பள்ளிவாசல் இமாம் ஒருவரால், வதந்தி முறியடிக்கப்பட்டது.

உதகையிலும் சிக்கல்:
சென்ற ஆண்டு விநாயகர் விசர்ஜன ஊர்வலம் உதகையில் நடந்தபோது மார்க்கெட் பகுதி (அங்கு முஸ்லிம்கள் அதிகமாக இருக்கிறார்களாம்) வழியாக வரக்கூடாது என்று கூறி கலவரத்தில் ஈடுபட்டனர், முஸ்லிம் இயக்கத்தை சேர்ந்தவர்கள். அதுபோல இம்முறை நடந்துவிடக் கூடாது என்று, முன்னெச்சரிக்கையாக புதிய வழித்தடத்தில் ஊர்வலம் செல்ல உதகை காவல்துறை ஏற்பாடு செய்தது. இதனை ஏற்க இந்து முன்னணியினர் மறுத்துவிட்டனர்.

காலம் காலமாக செல்லும் வழித்தடத்தில் தான் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடக்கும் என்று இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அறிவித்தனர். இதை அடுத்து, ஊர்வலம் துவங்கும் முன்னரே அவர்கள் கைது செய்யப்பட்டனர்; 70 பேர் கைது செய்யப்பட்டனர். தவிர, இந்து முன்னணியினர் கொண்டுவந்த விநாயகர் சிலைகளை காவல்துறையினரே கைப்பற்றிvக் கொண்டுசென்று காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்தில் கரைத்தனர்.

திருப்பூர் -ஸ்ரீநகரில் ஆசுவாசம்:
சென்ற ஆண்டு விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின்போது கல்வீச்சும் கலவரமும் நடந்த திருப்பூர்- ஸ்ரீநகரில், இந்த ஆண்டு முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் ஆயிரக் கணக்கில் குவிக்கப்பட்டனர். கேமரா கண்காணிப்புடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் விளைவாக இம்முறை இங்கு எந்த அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்கப்பட்டது. காவல்துறையினர் ஆசுவாசப் பெருமூச்சு விடுகின்றனர். இஸ்லாமியர்களின் எண்ணிக்கை ஒரு பகுதியில் அதிகரித்தாலே அங்கு கல்லெறி சகஜம் தான் போலும். காஷ்மீரின் ஸ்ரீநகரிலும் இது தானே நடக்கிறது?
------------------------------------------------------
காண்க: தமிழ் ஹிந்து
நன்றி: விஜயபாரதம் (01.10.2010)

உடன் படிக்க வேண்டியது: ராம.கோபாலன் நேர்காணல்
..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக