புதன், மே 18, 2011

தமிழகம் ஊழலுக்குக் கொடுத்த சம்மட்டி அடி

சிலரை சில காலம் ஏமாற்றலாம்; பலரை பல காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்று கூற்றை உண்மையென்று நிரூபித்திருக்கிறார்கள், தமிழக வாக்காளர்கள். பணபலத்தைப் பொருட்படுத்தாமல், ஆசை வார்த்தைகளுக்கு மசியாமல், ஊழலின் ஒட்டுமொத்த உருவாகக் காட்சியளித்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதன்மூலமாக, நாடு முழுவதற்கும் ஓர் அற்புதமான செய்தியையும் தமிழகம் தந்திருக்கிறது. அது…

‘ஊழல்வாதிகள் என்றுமே கொக்கரித்துக் கொண்டிருக்க முடியாது. ஊழல் உறுத்து வந்து ஊட்டும்; அரசியல் பிழைத்தோர்க்கு தேர்தல் கூற்றாகும்’ என்பதுதான்.

அதிகார
பலமும் கவர்ச்சிகரமான பிரசாரமும் லஞ்சமாக வழங்கப்பட்ட பணமும் தமிழக மக்களை முட்டாளாக்கிவிடவில்லை. இந்தப் பாணியில் எவர் செயல்பட்டாலும் வெற்றி கிட்டாது என்பது நாட்டு மக்களுக்கு தெள்ளத் தெளிவாக புரிய வைக்கப்பட்டிருக்கிறது. வாக்காளர்களுக்குக் கோடி நன்றி...

--------------------------------------
முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
விஜயபாரதம் (27.05.2011)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக