சனி, மே 21, 2011

மக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்புகளின் பின்னணி - ஓர் அலசல்.

ஜனநாயகத்தில் தேர்தல்கள் வகிக்கும் பேரிடத்தை உணர, அண்மையில் நடந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளைக் காண வேண்டும். மக்களின் அதிருப்தி ஓர் அலைபோல சுழன்று எழுந்தது. இத்தேர்தலில் வெளியேற்றப்பட்ட ஆட்சியாளர்கள் மூலமாக வெளிப்பட்டது. மக்கள் தாங்கள் விரும்பும் ஆட்சியை அமைப்பதும் விரும்பாத ஆட்சியைத் துரத்துவதும், மக்களாட்சியின் மாண்பு. எந்த ஆயுதப் பிரயோகமும் இன்றி, வாக்குப்பதிவாலேயே இதைச் சாதிப்பதுதான் ஜனநாயகத்தின் மகிமை. அந்த வகையில் அண்மைய தேர்தல்கள் பல அதிரடியான முடிவுகளை வழங்கி நமது ஜனநாயக நெறிமுறைகளுக்கு மகுடம் சூட்டி உள்ளன.

ஆறு கட்டமாக நடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் தென் மாநிலங்களான தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, வடகிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம், அசாம் ஆகியவை பங்கேற்றன. புவியியல் ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பல்வேறுபட்ட மாறுபாடுகளை உடைய இம்மாநிலங்களில் கிடைத்துள்ள முடிவுகள், நமது மக்களின் பக்குவத்தன்மையை பறைசாற்றுவனவாக அமைந்துள்ளன. குறிப்பாக, ஐந்து மாநிலங்களில் நான்கு மாநிலங்கள், அமைதிப்புரட்சி என்று சொல்லத்தக்க அளவில் சத்தமின்றி ஆட்சி மாற்றத்தைக் கண்டிருக்கின்றன. ஊழலுக்கு எதிரான தார்மிகக் கோபத்தையும் நிர்வாகச் சீர்கேட்டிற்கு எதிரான தங்கள் முதிர்ச்சியையும் மக்கள் இத்தேர்தலில் நிரூபித்துள்ளனர்.


இத்தேர்தல் ஒட்டுமொத்த தேசத்திற்கும் கூறுவது என்ன என்ற கேள்வி எழுகிறது. இனிவரும் சட்டசபைத் தேர்தல்களும் நாடாளுமன்றத் தேர்தலும் எந்தத் திசையில் இருக்கும் என்பதை அறுதியிடுவதாக இத்தேர்தலைக் காண முடிகிறது. இத்தேர்தல் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு வகையில் பாடம் கற்பித்திருக்கிறது. மக்களை மிகவும் குறைவாக எடைபோடக் கூடாது என்பதும் தெளிவாகி இருக்கிறது....


-------------------------------------

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

விஜயபாரதம் (03.06.2011)

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக