வெள்ளி, பிப்ரவரி 25, 2011

திருப்பூர்- திரும்ப முடியாத பாதையில்... (பகுதி - 2)

திருப்பூர் சாய ஆலைகளில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பொது சுத்திகரிப்பு நிலையம்

மன்னர் ஒருவர் தனது நாட்டு மக்களைச் சோதிக்க ஒரு பரீட்சை வைத்தாராம். 'நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இன்று இரவு ஒரு படி பால் கொண்டுவந்து காய்ந்துபோயுள்ள கோயில் குளத்தில் ஊற்ற வேண்டும்' என்பது மன்னர் உத்தரவு. அதன்படி ஒவ்வொருவரும் ஒருநாள் இரவு கோயில் குளத்தில் ஊற்றினார்களாம். மறுநாள் காலையில் கோயில் குளத்தில் பார்த்தபோது, கோயில் குளத்தில் பாலின் சுவடே தெரியவில்லை; தண்ணீரே நிறைந்திருந்ததாம்.

அதாவது, நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், நாம் மட்டும் தண்ணீர் ஊற்றினால் மன்னருக்குத் தெரியவா போகிறது என்ற எண்ணத்தில் தண்ணீரையே ஊற்றி இருக்கின்றனர். குளம் தண்ணீரால் நிறைந்துவிட்டது. இது நாட்டு மக்களைப் பற்றி அறிய மன்னருக்கு உதவியது- இது ஒரு கற்பனைக் கதை.

திருப்பூர் சாயஆலைகள் நிகழ்த்திய நதிநீர் மாசுபாட்டிற்கும் இக்கதைக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

திருப்பூர் வட்டாரத்தில் 1,500 சாய, சலவை ஆலைகள் உள்ளன. இவற்றிலிருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகே வெளியேற்றப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், பெரும்பாலான சாய, சலவை ஆலைகள், தங்கள் தொழிலகங்களிலிருந்து யாருக்கும் தெரியாமல் கழிவுநீரை இரவு வேளைகளில் திறந்துவிடுவது வழக்கமானது. ஒரு சாய ஆலை மட்டும் தவறு செய்வது யாருக்குத் தெரியப் போகிறது என்ற அலட்சிய மனப்பான்மை. இதேபோல பலரும் செய்யத் தலைப்பட்டபோது, நொய்யலில் சாயம் கலந்து பாய்ந்த கழிவுநீர் சாய ஆலைகளின் லட்சணத்தை அம்பலப்படுத்திவிட்டது....
...........................
------------------------------------
முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக