செவ்வாய், மார்ச் 01, 2011

தேர்தல் களம்: முதல் சுற்றில் முந்துகிறது அ.தி.மு.க


திருமணமே ஆகவில்லை; குழந்தைக்கு பெயர் வைக்கலாமா? என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ‘கூட்டணி ஆட்சிக்கு இப்போதே சம்மதம் தெரிவிக்க வேண்டும்’ என்று தி.மு.க.வுக்கு நெருக்கடி தரும் காங்கிரஸ் கட்சியைக் காணும்போது இந்தப் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் தனது பேரம் பேசும் உறுதிப்பாட்டை அதிகரிப்பதற்காக 80 இடங்களில் போட்டியிட விரும்புகிறது காங்கிரஸ். ஆனால், தி.மு.க. அதற்குத் தயாரில்லை. ஏற்கனவே பா.ம.க.வுக்கு 31 இடங்களை அளித்துவிட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட துக்கடா கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டிய நிலையில், 120 இடங்களுக்கு மேல் கண்டிப்பாக போட்டியிட நினைக்கிறது தி.மு.க. இக்கட்சியும் கூட, எந்த அடிப்படையில் தேர்தலுக்குப் பின் தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்று நம்புகிறது எனத் தெரியவில்லை. பரவாயில்லை, கனவு காண அனைவருக்கும் உரிமை உள்ளது....
............................................................
.......................
ஆளும் அணியில் கூட்டணி பேச்சுவார்த்தைகளே திண்டாட்டமாக உள்ள நிலையில், எதிரணியில் கொண்டாட்ட மனநிலை காணப்படுகிறது. இதுவே ஆளப்போகும் அணி எது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது.

தமிழக சட்டசபைத் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலேயே, முதல்சுற்றில் அ.தி.மு.க. அணி முந்தி வருகிறது. போதாக்குறைக்கு மத்தியிலும் மாநிலத்திலும் அரசிலுள்ள கட்சிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அதிருப்தி ஆகியவையும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக உள்ளன. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களோ இல்லையோ, அரசியல் கட்சிகள் மாற்றத்தை விரும்புகின்றன என்பதையே, தற்போதைய ‘தகுதிச் சுற்று’ தேர்தல் களம் காட்டுகிறது எனில் மிகையில்லை....

--------------------------------------
முழுக் கட்டுரையையும் காண்க: தமிழ் ஹிந்து
நன்றி: விஜயபாரதம் (11.03.2011)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக