செவ்வாய், பிப்ரவரி 12, 2013

அப்சலுக்கு தூக்கு: பயங்கரவாதிகளுக்கு படிப்பினை


நாடாளுமன்றம் மீதான தாக்குதலில் மரண தண்டனை விதிக்கப்பட்ட  முகமது அப்சல் குரு ஒருவழியாக, தில்லி  திஹார் சிறையில் பிப். 9-ம் தேதி தூக்கிலிடப்பட்டிருக்கிறார். 2006-ம் ஆண்டிலிருந்தே அப்சல் குரு மீதான தூக்கு  தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆயினும் சிறுபான்மையினரின் வாக்குவங்கி மீதான பாசத்தில் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலம் கடத்தி வந்தது. அப்சல் தூக்கிலிடப்பட்டதை ”எதுவும் செய்யாமல் இருப்பதைவிட தாமதமாகவேனும் செய்தது நல்லது தான்” என்று விமர்சித்திருக்கிறார் குஜராத் முதல்வர் மோடி உண்மை தான்.

இந்த விவகாரத்தில் இதுவரை நடந்திருப்பதை  பின்னோக்கிப் பார்ப்பது இப்போது அவசியமாகி இருக்கிறது….

முழு கட்டுரையைக் காண்க: தமிழ்  ஹிந்து 
--------------------------
விஜயபாரதம் (22.02.2013)

திங்கள், பிப்ரவரி 11, 2013

கண்களைத் திறந்த கமலுக்கு நன்றி!


தமிழகத்தில்  ஜனவரி கடைசி வாரம் மிகவும் பரபரப்பான நிகழ்வுகளால்  திரைப்படத்தின் உச்சகட்டக் காட்சி போல மாறி இருந்தது. இந்த நிகழ்வுகளின் அடிநாதம் கமலஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்’ படத்தால் விளைந்தது. இந்த நிகழ்வுகள், நம்மைச் சுற்றிலும் உள்ள மனிதர்களை, நமது தலைவர்களை, நமது கலைஞர்களை புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது எனில் மிகையில்லை...

நமது அச்சம் என்னவென்றால், கமலுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை,  நாளை யாருக்கும் ஏற்படலாம். அப்போது நமது அரசுகளும் இதே கலைஞர்களும் ஊடகங்களும் எப்படி செயல்படுவர்?  விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாக  தங்களைக்  கருதிக்கொள்ளும் முஸ்லிம்களுக்கு அஞ்சி, மென்மையான இலக்குகளை  திரையுலகும் ஊடகங்களும் தாக்குவது அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. (இப்போதே கமல் அதைத் தானே செய்கிறார்?) ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி தானே?...

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து  

---------------------------
விஜயபாரதம் (15.02.2013)
.