செவ்வாய், ஜூலை 30, 2013

தமிழகத்தை சிந்திக்கவைத்த ஆடிட்டர் ரமேஷ்!

நமது பொய்த் தூக்கத்தைக் கலைத்த
அமரர் சேலம் ஆடிட்டர் ரமேஷ்

2013, ஜுலை 19....

சேலத்தில் அன்றிரவு தூங்காத இரவாக மாறிப்போனது. கடந்த 36 ஆண்டுகளாக ஓய்வின்றி இந்து சமுதாயத்திற்காக உழைத்த ஆடிட்டர் ரமேஷ் என்ற களப்பணியாளர் அன்றிரவு சிந்திய ரத்தம், தமிழகம் முழுவதும் பெரும் தார்மிக ஆவேசத்தை உருவாக்கி, செயலிழந்த மாநில அரசையும் உலுக்கி இருக்கிறது....

அன்பான குடும்பத்தின் தலைவராக, அற்புதமான இயக்க செயல்வீரராக, மக்களின் அன்பை வென்ற தலைவராக, அமைதியாகக் கருத்துகளை வெளிப்படுத்தி கொள்கைகளை விளக்கும் சித்தாந்தியாக, சிரித்த முகமும் இனிய சுபாவமும் கொண்ட எளிய மனிதராக விளங்கிய அவரது இழப்பு கண்டிப்பாக ஈடு செய்ய இயலாததே....

சேலம் ஆடிட்டர் படுகொலை நிகழ்வு- சமூகம், அரசியல்வாதிகள், அரசு நிர்வாகம், ஊடகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிலும் நிலவி வந்த மெத்தனப் போக்கை மாற்றி இருக்கிறது. இந்த விழிப்புணர்வு,  சேலம் ஆடிட்டர் ரமேஷின் உயிர்த் தியாகத்தால் அமைந்தது. அவருக்கு நமது கண்ணீர் கலந்த நன்றிகளும் வீர வணக்கங்களும் என்றும் உண்டு.

--------------------------  

முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக