புதன், அக்டோபர் 03, 2012

விவசாயிகளைப் பாதுகாப்போம்!


மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்ப்பா பகுதியில் மட்டுமே வங்கியில் வாங்கிய விவசாயக் கடனைக் கட்ட முடியாததால் பலநூறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் விவசாயிகள் தற்கொலையில் முதலிடம் வகிக்கிறது. இத்தனைக்கும் இந்த விவசாயிகள் விளைவித்த பருத்திக்கு சந்தையில் கிராக்கி. எங்கோ தவறு நடப்பதை இந்த விவசாயிகளின் தற்கொலைகள் காட்டுகின்றன.

பல்லாயிரம் கோடி ஊழல் புரிந்த அரசியல்வாதிகள் புன்னகையுடன் பத்திரிகைகளில் ‘போஸ்’ தருகிறார்கள். அடுத்தவர் பணத்தை மோசடி செய்து வயிறு வளர்க்கும் நிதி மோசடி நிறுவனங்களின் அதிபர்கள் புன்னகையுடன் காவலர்கள் சூழ உலா வருகிறார்கள். லஞ்சம் வாங்கியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர் கூட வழக்குரைஞர் வைத்து வாதாடுகிறார்- தான் தவறிழைக்கவில்லை என. ஆனால், சில லட்சம் அல்லது சில ஆயிரம் கடன் வாங்கிவிட்டு, அதைத் திருப்பித் தர முடியாத அவமானத்தால் தற்கொலை செய்துகொள்ளும் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் இதே காலகட்டத்தில் நமது நாட்டில் தான் இருக்கிறார்கள். எங்கோ ஒரு சிக்கல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அந்தச் சிக்கல் என்ன? விவசாயிகளை வாழ்வின் இறுதிக்குத் தள்ளும் காரணிகள் எவை? என்பதை ஆராய்கிறது, ஈரோடு சு.சண்முகவேல் எழுதியுள்ள விவசாயிகளைப் பாதுகாப்போம் என்ற இந்தப் புத்தகம்....

----------------------------------
நண்பர் ஈரோடு சு.சண்முகவேலின் 'விவசாயிகளைப் பாதுகாப்போம்' நூல் குறித்த விமர்சனம்: தமிழ் ஹிந்து


செவ்வாய், செப்டம்பர் 25, 2012

வெகுளித்தனமானவர்களா முஸ்லிம்கள்?


‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில்  நெரி கட்டுமா?’ என்ற பழமொழி  உண்டு.  ஆனால், அது சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறார்கள் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள். அமெரிக்காவில் உள்ள ஒரு கிறிஸ்தவ வெறியன் தயாரித்த முஸ்லிம்களைப் புண்படுத்தும் திரைப்படத்தால் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள்  கொந்தளித்திருக்கிறார்கள். அதன் விளைவாக, பல நாடுகளில் கலவரம்- இந்தியா உள்பட. அதன் உச்சகட்டமாக சென்னையில், அண்ணா சாலையில் முஸ்லிம் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால்   மாநகரக் காவல் ஆணையர் இடம் மாற்றப்பட்டிருக்கிறார்....

கிறிஸ்தவ மத வெறியர்களின் கருத்து, ”உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் வெகுளித்தனமானவர்கள்; அவர்களது வெறி பிடித்த மதமே அவர்களை மிருகம் ஆக்குகிறது” என்பதுதான். படத்தின் தலைப்பே அதுதானே? அதை நிரூபிக்க  அவர்கள் எடுத்த படம் அதன் பலனை அடைத்துவிட்டது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் காட்டுமிராண்டித்தனமானவர்கள் என்பதை தங்கள் பதிலடியால் நிரூபித்திருக்கிறார்கள். அதாவது ‘முஸ்லிம்களின் முரட்டுத்தனம்’ (Arrogance Of Muslims) என்று இந்தப் படத்துக்கு பெயர் வைத்திருக்கலாம் என்று தங்கள் வன்முறையால் நிலைநாட்டி இருக்கிறார்கள்...

மொத்தத்தில், இந்த உலகம் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமியர்களுக்கும் இடையிலான சொத்துத் தகராறில் ரத்தம் சிந்துவது தொடர்கிறது. அடுத்த உலகப்போருக்கு ஒரு ஒத்திகையாகவே இன்றைய சதியைக் காண வேண்டும். அப்படி மீண்டும் ஒரு உலகப்போர்  மதவெறி காரணமாக மூளுமானால், நாம் யாரும் மிச்சம் இருக்க மாட்டோம் என்பது மட்டும் நிச்சயம். அதற்கு, அந்த அளவற்ற அருளாளனும், பகைவரையும் நேசிக்கச் சொன்ன தேவதூதனும் தான் காரணமாக இருப்பார்கள்.

-------------------------------------------
முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

விஜயபாரதம்  
.