சனி, அக்டோபர் 16, 2010

காலம் வருகுது!


சமுதாயம் மலருகின்ற காலம் வருகுது - இந்து
சமுதாயம் எழுச்சி கொண்டு எழுந்து நிற்குது!
(சமுதாயம்)
.
மூவிருபது ஆண்டுகளாய் சங்க சாதனை - நமது
நாவினிலே சொல்லுகையில் நரம்பு துடிக்குது!
ஏவிவிட்ட தடைகளினை ஏணியாகவே கொண்டு
தாவிவந்த காரணத்தால் வெற்றி தாளிலே!
(சமுதாயம்)
.
இந்து என்று சொல்லிடவே அஞ்சிய வேளை-தீப்
பந்தமாக நமது சங்கம் ஒளிர வந்தது!
நிந்தனைக்கும் வந்தனைக்கும் நின்றிடாமலே
மந்தநிலை மாற்றிடவே தெளிவு தந்தது!
(சமுதாயம்)
.
கற்பாறை என்று சொன்ன காலமும் உண்டு - சங்க
பொற்பாதம் தீண்டுகையில் கல்லும் இறுகுமோ?
அற்பம் என்று கேலி செய்த அன்பர்கள் கூட- இன்று
சொற்பமல்ல என்றுணர்ந்து தோள் கொடுக்கிறார்!
(சமுதாயம்)
.
சங்கதீபம் தமிழகத்தில் சுடர் வேண்டியே - இங்கு
தங்களையே நெய்யாக்கி வளர்த்த தவமிது!
சங்கமெனப் பாய்ந்துவரும் சங்க நதியிலே - மூழ்கி
சிங்கநாதம் செய்திடுவோம்! சிறுமை நீங்குவோம்!
(சமுதாயம்)
.
சமுதாயம் மலருகின்ற காலம் வருகுது - இந்து
சமுதாயம் எழுச்சி கொண்டு எழுந்து நிற்குது!

------------------------------------------------
குறிப்பு: நாளை , ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் துவங்கிய நாள் (1925).
நன்றி: விஜயபாரதம் (04.02.2000)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக