வெள்ளி, ஜூன் 13, 2014

இலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி



மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டாமல் போனது தமிழகத்தின் துரதிர்ஷ்டமே. ஆளும் கட்சியான அதிமுகவின் அசுரத்தனமான வெற்றியால் தமிழக தே.ஜ. கூட்டணி நிலைகுலைந்திருப்பது, கூட்டணித் தலைவர்களின் மௌனத்திலேயே புலப்படுகிறது. இந்தக் கூட்டணி இனிவரும் காலத்தில் நீடிக்குமா என்ற கேள்வியும் எழத் துவங்கிவிட்டது

இந்தக் கேள்விக்கு விடை காணும் முன்னர், நாடு முழுவதும் வெற்றியை ஈட்ட முடிந்த மோடி அலை தமிழகத்தில் செல்லுபடியாகாமல் போனதன் காரணம் என்ன என்று ஆராய்வது அவசியம்.
................
..............
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

----------------
விஜயபாரதம் (20.06.2014)
.

வியாழன், ஜூன் 05, 2014

மோடி அரசின் ஆரம்பமே அசத்தல்!


நாட்டின் 15வது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடியின் ஆரம்பமே அசத்தலாக உள்ளது. தனது பதவியேற்பு விழாவிலேயே தெற்காசிய நாடுகளின் தலைவர்களை அழைத்து பிரமிப்பூட்டிய மோடியின் ஒவ்வொருநாள் நடவடிக்கையும் ஊடகங்களால் பெரிதும் வியந்தோதப்படுகிறது.

டி.என்.சேஷனால் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்த மரியாதை போல, இதுவரையிலும் இழந்துபோன பிரதமர் பதவியின் மதிப்பு மோடியால் மீட்கப்படும் காட்சி தெளிவாகவே தென்படுகிறது. பிரதமர் மோடியின் முதல் ஒருவாரகால செயல்பாடுகள் அவர் செல்லும் திசையை தெளிவாகவே காட்டுகின்றன.

‘தனது அரசு ஏழைகளின் அரசாக இருக்கும்’ என்று துவக்கத்திலேயே பிரகடனம் செய்துள்ள பிரதமர் மோடி, அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் இணைந்து நாட்டை உயர்த்த வருமாறு அழைப்பு விடுத்தார். தேர்தல் கால விரோதங்கள் தொடரக் கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தான் சார்ந்த கட்சியினருக்கு அளிக்க வேண்டிய மரியாதையும் மதிப்பையும் அளிப்பது போலவே, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியினரின் மதிப்பை உணர்ந்தவராக அவர்களின் ஒத்துழைப்பையும் மோடி நாடி இருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு உள்ள அதீதப் பெரும்பான்மை பலம் மோடியை மேலும் பண்புள்ளவராகவே மாற்றி இருக்கிறது...
.............
....
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

-------------------
விஜயபாரதம்