வியாழன், பிப்ரவரி 04, 2016

ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…



....இமயம் முதல் குமரி வரை வியாபித்துள்ள இந்த பரந்த பாரத தேசத்தின் ஆன்மா பண்பாட்டில் தான் ஒளிந்திருக்கிறது. அதனால் தான், சுமார் ஆயிரம் ஆண்டுகால அந்நியப் படையெடுப்புகள், ஆதிக்கங்களையும் மீறி, உயிர்ப்புடன் விளங்கும் பழமையான நாடாக பாரதம் விளங்குகிறது.

யூப்ரடிஸ், டைகரிஸ் நதிக்கரையில் தோன்றிய சுமேரிய நாகரிகம் (மெசபடோமியா)  மறைந்துவிட்டது. எகிப்தில் தோன்றிய நைல் நதி நாகரிகம் பிரமிடுகளாகத் தொக்கி  நிற்கிறது. கிரேக்க, ரோமப் பேரரசுகள் ஐரோப்பாவைக் கட்டியாண்ட நிகழ்வுகள் பழங்கதைகள் ஆகிவிட்டன. இன்று அக்கதைகள் ஹாலிவுட் திரைப்படங்கள் எடுப்பதற்கான வெறும் திரைக்கதைகள் மட்டுமே. இவை அனைத்தும் சுமார் 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. ஆனால், இவற்றின் எச்சங்களே இன்று நம்மிடையே எஞ்சியிருக்கின்றன. மஞ்சள் ஆற்று நாகரிகம் என்று சொல்லப்படும் சீன நாகரிகம் மட்டுமே ஓரளவு இன்றும் உலகில் உள்ளது.

ஆனால், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று புகழப்படும் தமிழர்தம் பண்பாடு இன்றும் இளமைப் பொலிவுடன் வீற்றிருக்கிறது. உலகின் பழமையான நாகரிகங்களுள் ஒன்றாகக் கூறப்படும் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் இடைவிடாத தொடர்ச்சியாக பாரதம் மிளிர்கிறது. இவ்வாறு நம்மை பிற நாடுகளிடமிருந்து வேறுபடுத்துவது எது?

பகவத் கீதையை பார்த்தனுக்கு கண்ணன் உரைத்து 5,300 ஆண்டுகள் கழிந்துவிட்டன. பாரத காலக் கணக்கீட்டின்படி, நாம் இதுவரை 4 யுகங்களைக் கடந்திருக்கிறோம். இவற்றை தோராயமாகக் கணக்கிட்டால் அவற்றின் காலம் தற்போதைய பூமியின் வயதுடன் ஒத்திருப்பதாக நிலவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆக உலகின் மிகப் பழமையான மனித குலத்தின் சந்ததிகள் நாம் தான். நமக்குப் பின் பல நாடுகளில் உருவான நாகரிகங்கள் மாயமாகிவிட்டாலும், நாம் என்றும் இளமை குன்றாத தன்மையோடு, உலகிற்கு ஆனந்தமான பாதையைக் காட்டக் காத்திருக்கிறோம்.

நம்மிடையே குறைகள் இல்லாமல் இல்லை. ஜாதி வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட சீர்கேடுகள், நாட்டை அரிக்கும் ஊழல்கள், எனப் பல குறைகள் நம்மை பலவீனப்படுத்துகின்றன. ஆயினும் நம்மை ஏதோ ஒரு சக்தி ஒருங்கிணைத்து காத்து நிற்கிறதே, அந்த சக்தி எது?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில்: ஹிந்துப் பண்பாடு.
...................................

முழு கட்டுரையைக்  காண்க: தமிழ் ஹிந்து


திங்கள், ஜனவரி 11, 2016

மால்டாவும் தாத்ரியும்…



சரித்திரம் என்பது அனுபவங்களின் விளைநிலம். அதன்மீது தான் நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் சரித்திரம் தந்த அனுபவங்களிலிருந்து எந்தப் பாடமும் கற்காதவர்கள் தொடர்ந்து துயரங்களையே அறுவடை செய்வர். இதற்கு நமது நாடு மிகச் சரியான உதாரணம்...

அண்மையில் மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டம், காளியாசாக் கிராமத்தில் 2016, ஜனவரி 3-இல் நடைபெற்ற திட்டமிட்ட வன்முறை, நமது நாடு எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்போகும் மிக ஆபத்தான சவாலை முன்கூட்டியே நமக்குக் காட்டியிருக்கிறது....

நெருப்புடன் விளையாடுவோர் தீக்காயம் அடைவது உறுதி. பஞ்சாபில் பிந்தரன்வாலேவை வளர்த்துவிட்ட இந்திராகாந்தி சீக்கிய அடிப்படைவாதத்துக்கே பலியானார் என்பதை மறந்துவிடக் கூடாது. அரசியல் லாபங்களுக்காக நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பணயம் வைப்பவர்கள், பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள். இதை மேற்கு வங்க மக்கள் உணராதவரை, இத்தகைய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும்; மோசமான அனுபவங்கள் சரித்திரத்தில் பதிவாகிக் கொண்டே இருக்கும்.

-----------------
விஜயபாரதம்

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 
.