புதன், செப்டம்பர் 19, 2012

மண்குடமும் பொன்குடமும்


அண்மையில் குஜராத் மாநிலத்தில் 2002-ஆம் ஆண்டு நடந்த வகுப்புக் கலவரம் தொடர்பாக அம்மாநில முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானிக்கு 28 ஆண்டு சிறைதண்டனை உள்பட 29 பேருக்கு கடும் தண்டனைகளை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு பல கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது....

நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பது சாட்சியங்களின் அடிப்படையில் மட்டுமே. அதற்குக் காவல்துறையினர் வழக்கின் துவக்கத்தில் இருந்தே உறுதியான சாட்சியங்களைச் சேகரிப்பதும், நடுநிலையாகச் செயல்படுவதும் அவசியம். ஆளும் தரப்பின் இடையூறு இல்லாமல் இருந்திருந்தால் தினகரன் வழக்கு நீர்த்துப் போயிருக்காது. அது எவ்வளவு உண்மையோ, அதேபோல, குஜராத் மாநில அரசின் தலையீடு இல்லாததால் தான் நரோடா பட்டியா கலவர வழக்கில் அம்மாநில காவல்துறை ஆளும்கட்சிப் பிரமுகருக்கு எதிராகவே வழக்குப் பதிய முடிந்தது என்பதும் உண்மை. தமிழகத்திலோ, கேரளத்திலோ, உத்தரப்பிரதேசத்திலோ இத்தகைய நடைமுறையைக் காண முடிகிறதா?...

---------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

விஜயபாரதம் (21.09.2012)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக