செவ்வாய், செப்டம்பர் 06, 2011

லோக்பால் மசோதா: ஹசாரே போராட்டம் வெற்றியா?

எதிர்பார்த்ததுபோல சமூகசேவகர் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் முழுமையான வெற்றியைப் பெற முடியாமல் போனாலும், நாடு முழுவதும் தேசபக்தியை கிளறச் செய்ததில் பெரும் பங்காற்றியுள்ளது. இமயம் முதல் குமரி வரை, குஜராத் முதல் அருணாச்சல் வரை, ஹசாரே உண்ணாவிரதத்துக்கு ஆதரவாகக் கிளம்பிய நாட்டுமக்கள் 'வந்தேமாதரம்!', 'பாரத் மாதா கி ஜெய்!' ஆகிய கோஷங்களை விண்ணதிர எழுப்பி, ஊழல்மயமான மத்திய அரசை நிலைகுலையச் செய்தார்கள். ஆரம்பத்தில் ஹசாரே குழுவை பகடி பேசிய காங்கிரஸ் கும்பல், மக்கள் எழுச்சி கண்டு மிரண்டது; பிறகு வழிக்கு வந்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கண்டிப்பான அணுகுமுறையும் காரணம் எனில் மிகையில்லை.

கடந்த ஐந்தாண்டுகளாக நமது நாட்டிற்கு போதாத காலம். அடுத்தடுத்து வெளிவந்த பல்லாயிரம் கோடி ஊழல்களால் மக்கள் வெகுண்டு போயிருந்தார்கள். ரூ. 1.76 லட்சம் கோடி இழப்புக்குக் காரணமான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு மோசடி, 'ராசா’வாக அவதாரம் எடுத்தது. காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாடுகளில் ஊழல், கார்கில் வீரர் குடியிருப்பில் ஊழல், இஸ்ரோ அலைக்கற்றை ஊழல் என, ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த ஊழல்களால் நாட்டுமக்கள் நம்பிக்கை இழந்திருந்தார்கள். ஆனால், அரசைக் கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகளை வக்கணையாக விமர்சித்தபடி, சிறுபான்மையினர் ஆதரவு கோஷங்களுடன் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தது மன்மோகன் அரசு. இந்த நிலையில்தான், ஊழலுக்கு எதிரான களப்போராளியாக ஏற்கனவே சிறு வெற்றிகளை அடைந்திருந்த சமூக சேவகர் அண்ணா ஹசாரே தலைமையில் ஒரு குழு ஊழலுக்கு எதிரான வலிமையான குரலுடன் களம் கண்டது.............

....................................................


ஆனால், ஊழலுக்கு எதிரான போர் அவ்வளவு எளிதாக முடிந்துவிடாது. ஊழல் புரிந்தவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது அவ்வளவு எளிதாக பதவியிலிருந்து விடுபட ஒத்துழைக்க மாட்டார்கள். தலித் தலைவர் உதித்ராஜைத் தூண்டிவிட்டு ‘பகுஜன் லோக்பால் மசோதா’ என்ற ஒன்றை புதிதாகப் புகுத்துபவர்கள் ஆளும் தரப்பினரே என்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை. பல ஊழல் வழக்குகளை ஒன்றுமில்லாமல் ஆக்குபவர்கள் மற்றும் எதிரணியினரை கீழ்மைப்படுத்தி அரசியல் சாகசம் செய்பவர்களிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். பதுங்கியுள்ள காங்கிரஸ் நரி எப்போது வேண்டுமானாலும் பாயலாம். அதை ஹசாரே குழுவினர் உணர்வது நல்லது....


------------------------------------

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக