செவ்வாய், செப்டம்பர் 04, 2012

ஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா?


‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்’ என்ற பழமொழி உண்டு. கடந்த வாரம் நாடாளுமன்றம் பாஜகவின் போராட்டத்தால் முடக்கப்பட்டபோது அதை எதிர்த்து எழுந்த சில குரல்களைக் கேட்டவுடன் அந்தப் பழமொழி தான் நினைவுக்கு வந்தது.

ஸ்பெக்ட்ரம் ஊழலை விஞ்சும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் காரணமாக மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் முகத்தில் வண்டி வண்டியாக கரி அப்பிக் கிடக்கிறது. இந்த ஊழல் நடந்தபோது நிலக்கரித் துறை அமைச்சர் பதவி வகித்தவர் பிரதமர் மன்மோகன் சிங்கே என்பதால், பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இந்த ஊழலுக்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவியில் இருந்து மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான பாஜக கோரியது. இந்தக் கோரிக்கையை முன்வைத்தே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமளியில் ஈடுபட்டது. அப்போது தான் ஜனநாயகத்தின் மாண்பை விளக்கும் அற்புதமான உபன்யாசகங்களைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. ...

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

----------------------------------
விஜயபாரதம் (07.09.2012)
.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக